ஒரு சிறு இசை
சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
சில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு. இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். எழுபதுகளில் எழுதவந்தவர். தமிழில் அவருக்கு ஒரு முன்னோடி மரபு உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என ஒரு மரபு. ஒளிவிடும் ஓடை என மொழி வழிந்தோடும் தடம் என கதையின் வடிவத்தை அமைத்துக்கொண்டவர்கள் இவர்கள். ஓடை தடம் மாறுவதேயில்லை. காதலியின் முத்தம் போலவோ நூற்றுக்கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைப்பவை. வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்.
- Format:Paperback
- Pages:160 pages
- Publication:2013
- Publisher:சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
- Edition:
- Language:tam
- ISBN10:
- ISBN13:9789381343647
- kindle Asin:9381343640





![தேசாந்திரி [Desanthiri]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1340788675l/15724524.jpg)
![ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1387973448l/15845657.jpg)
![நந்தி ரகசியம் [Nandhi Ragasiyam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1573978588l/22589936.jpg)
